கல்வி அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
அதிபர்கள் இடமாற்ற முறைமையில் காணப்படும் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையை அதிபர் சேவைகள் சங்க தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ச முன்வைத்துள்ளார்.
இடமாற்ற பிரச்சனை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதிபர்கள் இடமாற்றம் தொடர்பில் ஆளுநர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளினால் குறித்த முறைமை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அதிபர் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே இப்பிரச்சினைக்கான தீர்வை உடனடியாக வழங்குமாறு கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக அதன் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ச தெரிவித்துள்ளார்.