24 663439f77bcf4
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு கடன் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

Share

வெளிநாட்டு கடன் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

வருடாந்தம் சுமார் 2.5 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டு கடனாக செலுத்தப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siambalapitiya) தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கடன் செலுத்துதல் உத்தியோகபூர்வமாக இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், இந்த தொகை கடனாக செலுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இருதரப்பு வெளிநாட்டு கடன் கொடுப்பனவுகள் மாத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடன் கொடுப்பனவு இடைநிறுத்தப்படுவதற்கு முன்னர், அவர்கள் வருடாந்தம் சுமார் 5 பில்லியன் டொலர்களை செலுத்தி வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கடன் கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்ட போதிலும், 2022 ஆம் ஆண்டில் 2.5 பில்லியன் டொலர்களும், 2023 ஆம் ஆண்டில் 2.6 பில்லியன் டொலர்களும் வெளிநாட்டுக் கடனாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...