12
இலங்கைசெய்திகள்

விஐபி கதிரையை ஏற்க மறுக்கும் அமைச்சர்

Share

விஐபி கதிரையை ஏற்க மறுக்கும் அமைச்சர்

நிகழ்வுகளில் தமக்கு விசேட பிரமுகர்கள் அமரும் கதிரைகளை கொண்டு வரவேண்டாம் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன(shandana abeyratne) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புத்தளம்(puttalam) மாவட்ட இலக்கிய விழாவிற்காக ஆனமடுவ சுதம்பாய மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிகழ்விற்கு வருகை தருகின்றார்கள் என்பதற்காக, தேவையில்லாத செலவு எதனையும் செய்யவேண்டாம். அத்துடன் நான் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்வுகளின் செலவையும் குறைப்பது தொடர்பாக நிறுவனங்களுக்குத் தெரிவிக்க தயாராகி வருகிறேன்.

அதேபோன்று விசேட பிரமுகர்கள் அமர்வதற்கான கதிரைகளை எமக்கு கொண்டு வர வேண்டாம். நாங்கள் சாதாரண பிளாஸ்டிக் கதிரைகளில் அமர்ந்தவர்கள். அந்த கதிரைகள் போதும்.

இந்த ஆனமடுவை எமக்கு அறிமுகமில்லாத பிரதேசம் அல்ல.எனவே அந்தச் சூழலினால் எவ்வளவோ உயரிய பதவிகளுக்குச் சென்றாலும் மரங்களும் பசுமையான ஏரிகளும் கொண்ட அழகிய இடம் இது , நாம் இருந்த கடந்த காலத்தை மறக்க முடியாது. எனவே, எந்த நிகழ்ச்சிக்கும் தேவையில்லாத செலவு செய்து பணத்தை வீணாக்க விரும்பவில்லை என்றார்.

Share
தொடர்புடையது
anura signature
இலங்கை

ஜனாதிபதி அனுரகுமார அவர்கள் கையெழுத்திட்டால் மரண தண்டனையை நிறைவேற்றலாம்!

பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில்அவர்களுக்கு எதிராக...

AL Exam Bad Weather Grade 05 Scholarship examination
இலங்கை

பரீட்சை காலத்து இடர்களை அறிவிப்பதற்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள தொலைபேசி இலக்கங்கள்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமானது, ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் மற்றும் உயர் தரப் பரீட்சைக்...

Sri Pada 1
இலங்கை

சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதையில்மண்மேடு சரிந்தது – காலநிலை சீரானதும் சீரமைப்பு பணிகள் இடம்பெறும்.

சிவனொளிபாத மலையின் உச்சியில், நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. சிவனொளிபாத மலைக்கு...

குளவிக்கொட்டு
இலங்கை

குளவிக்கொட்டுக்கு இலக்கான 50 இற்கும் அதிகமான மாணவர்கள்.

  திருகோணமலை திவுல்வெவ மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள், குளவி கொட்டுக்கு...