ratta
அரசியல்இலங்கைசெய்திகள்

போராட்ட செயற்பாட்டாளர் கணக்கில் பல மில்லியன் ரூபா வைப்பு! – சட்ட நடவடிக்கை விரைவில்

Share

தனக்கு தெரியாத நபர்களிடமிருந்து திடீரென தனது வங்கிக் கணக்கில் 50 லட்சம் ரூபா வரவு வைக்கப்பட்டதாக, காலிமுகத்திடல் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான ரெட்டா எனப்படும் ரதிது சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட வங்கியில் முறைப்பாடு செய்திருப்பதாகவும், எதிர்காலத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தனது சமூகவலைத்தள கணக்கில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள அவர்,

போராட்டத்திற்காக தனிப்பட்ட பணத்தை செலவழித்ததாகவும், தனிப்பட்ட முறையில் எதனையும் பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில திடீரென எனது கணக்கிற்கு எவ்வித அறிவிப்புமின்றி 50 லட்சம் ரூபா வைப்பிடப்பட்டுள்ளது. நான் இதனை எடுத்து செலவு செய்த பின்னர் போராட்டம் மூலம் நிதி மோசடி செய்ததாகவும், டயஸ்போரா வலையில் சிக்கி விடுவேன் எனவும் இதனை வைப்பிட்டவர் திட்டமிட்டிருப்பார்.

நான் CIMA தகுதி பெற்ற கணக்காளர் ஒருவராகும். நான் பணத்திற்கு வளைந்து கொடுக்கக்கூடியவன் அல்ல என உங்களுக்கு தெரியும். இதுவரையில் போராட்டத்தில் தனிப்பட்ட இலாபம் எதுவும் பெறவில்லை.
எமது கைகள் 100 சதவீதம் சுத்தமாக இருந்தமையினாலேயே எம்மை அடக்குவதற்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சேறு பூசும் பிரச்சாரங்கள் குறித்து அலட்சியமாக இருக்க முடிந்தது.

இன்று திடீரென எனது கணக்கில் விழுந்த 5 மில்லியன் வைப்பிலிடப்பட்டமை தொடர்பில் சம்பத் வங்கியில் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளேன் என ரெட்டா குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...