tamilni 166 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பால்மா இறக்குமதி நிறுத்தப்படுமா…! வெளியான தகவல்

Share

இலங்கையில் பால்மா இறக்குமதி நிறுத்தப்படுமா…! வெளியான தகவல்

இலங்கையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதல் பால்மா இறக்குமதியை நிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் தற்பொழுது மொத்த பால் தேவையில் 42 சதவீதமான பால் தேவையை உள்நாட்டு உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நாட்டின் மொத்த பால் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டிலும் சுமார் 600 மில்லியன் டொலர் நிதி செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் வெளிநாட்டிலிருந்து பால் இறக்குமதி செய்வதனை வரையறுக்க முடியும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு பால் உற்பத்தி துறையை அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, சந்தையில் வருடாந்த பால்மா தேவையை பூர்த்தி செய்வதற்கு 700 மில்லியன் லீட்டர் பால் தேவைப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...