army
அரசியல்இலங்கைசெய்திகள்

கொழும்பில் இராணுவத்தினர் குவிப்பு!

Share

கொழும்பு நகரின் பாதுகாப்பு பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. படையினருக்கு மேலதிகமாக இராணுவத்தின் கலகமடக்கும் பிரிவினரும் களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் பேரணி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அதனை தடுப்பதற்காக, வீதிகள் பல பூட்டப்பட்டுள்ளன.

கொழும்பில், வைத்தியசாலை சுற்றுவட்டம், பித்தள சந்தி, யூனியன் பிளேஸ், கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட இடங்களிலுள்ள வீதிகள் பூட்டப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டமும் பேரணியும், தாமரை தடாகம் பக்கத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. அந்த சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பேரணியால், கொழும்பு கோட்டை, நகர மண்டபம், கொள்ளுப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ், இராணுவத்தின் கலகமடக்கும் பிரிவு, விசேட அதிரடிப்படை ஆகியனவும் களத்தில் குவிக்கப்பட்டுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...