WhatsApp Image 2022 07 01 at 12.31.23 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

மீண்டும் தாய்வீடு திரும்பினார் மேர்வின்!

Share

இலங்கையில் சர்ச்சைக்குரிய அரசியல் வாதியாக கருதப்படுகின்ற முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் மீண்டும் இணைந்துள்ளார்.

சுதந்திரக்கட்சி தலைவரான மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, கட்சி உறுப்புரிமையை அவர் பெற்றுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் பலம்மிக்க அமைச்சராக வலம் வந்த மேர்வின் சில்வா, தனக்கே உரிய பாணியில் அடாவடி அரசியலையும் முன்னெடுத்தார். களனி தேர்தல் தொகுதியை தனது அரசியல் கோட்டையாக மாற்றியமைத்துக்கொண்டார். அங்கு கட்டபஞ்சாயத்து அரசியலும் இடம்பெற்றது.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளராக இருந்த நவநீதம் பிள்ளை அம்மையார் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கு திருமண அழைப்பை விடுத்து, நாட்டுக்கு இராஜதந்திர மட்டத்தில் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியவர் மேர்வின் சில்வா.

கிராம சேவகர் ஒருவரை மரத்தில் கட்டிவைத்து, அரச நிர்வாக சேவையில் கடும் எதிர்ப்பை தேடி கொண்டவர். ஊடக நிறுவனம்மீது தாக்குதல் நடத்தி ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தல் விடுத்தவர்.

2015 பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அவருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வேட்புமனு வழங்கவில்லை.

ராஜபக்சக்களுக்கு விசுவாசமாக இருந்த அவர், அதன் பின்னர் ராஜபக்சக்களை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார்.

கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக அநுராதபுரம் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது சுதந்திரக்கட்சியில் இணைந்துள்ளார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரையும் மேர்வின் சில்வா, கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆர்.சனத்

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f7986211c31
செய்திகள்இலங்கை

வவுனியா மாநகர சபை செயற்பாடுகளுக்கு இடைக்காலத் தடை: மேலதிக ஆசனப் பிரச்சினைக்கு ஜனாதிபதி சட்டத்தரணி ஆஜர்!

வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி வரை இடைக்காலத்...

articles2FFRfdZpigOe1FxwuUE5O6
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் யாழ். மற்றும் கிளிநொச்சியில் கைது!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் யாழ், கிளிநொச்சியில் கைது! ஒழுங்கமைக்கப்பட்ட...

25 68f843287a66a
செய்திகள்இலங்கை

வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தேர்வில் தேசிய மக்கள் சக்தி தீவிரம் – தமிழரசுக் கட்சியின் சுமந்திரனும் தயார்!

வரும் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடிய நபர்கள் தொடர்பில் பிரதான கட்சிகள் தீவிர...

IMG 0949
செய்திகள்உலகம்

தென் கொரியாவில் வசிக்கும் தெவிநுவர பிரதான கடத்தல்காரர்: போதைப்பொருள் வலையமைப்பு குறித்து தீவிர விசாரணை!

மாத்தறை – தெவிநுவர பிரதேசத்தில் செயல்படுவதாகக் கூறப்படும் போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பாக விசாரணை அதிகாரிகள் தற்போது...