tamilni 40 scaled
இலங்கைசெய்திகள்

சஜித்துக்கு எதிராக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு

Share

சஜித்துக்கு எதிராக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் கருத்தைக் கேட்காமல் தனது சுய கருத்தை மாத்திரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததற்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுக் கூட்டத்தின் போதே இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் நாடாளுமன்றில் கூடியது.

“எதிர்க்கட்சித் தலைவர் மீது அரசாங்கம் பெரும் சுமையை சுமத்தி வருகிறது. அவர் எங்கள் தலைவர். வேறு யாரும் இல்லை” என கூட்டத்தின் தொடக்கத்திலேயே கட்சியின் பொதுச்செயலாளர் கூறியதையடுத்து, உறுப்பினர்களிடமிருந்து எதிர்ப்பு வெளியாகியுள்ளது.

இதன்போது “சஜித் பிரேமதாச தனக்கு என்ன வேண்டும், வேண்டாம் என பேசுவதாலேயே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது” என நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத் தலைவர்களுடன் முரண்படுவது நல்லதென்றாலும், சனத் நிஷாந்த, பிரசன்ன ரணவீர போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முரண்படுவது நல்லதல்ல எனவும் கட்சியின் உறுப்பினர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் பேசும் போது, விளம்பரத்தை தேடக் கூடாது என குற்றம் சுமத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
1732374016 images 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: மலைப்பகுதி மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை ஆகிய...

24514649 rain
செய்திகள்விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் டி20 ரத்து செய்யப்பட்ட போட்டியின் நுழைவுச்சீட்டுகள் நாளை செல்லுபடியாகும்!

மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டிக்காக...

AP01 10 2026 000005B
செய்திகள்உலகம்

என்னை விட நோபல் பரிசுக்குத் தகுதியானவர் எவருமில்லை: இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் பெருமிதம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பாரிய போர் அபாயத்தைத் தான் தடுத்து நிறுத்தியதாகவும், அதன் அடிப்படையில்...

06 1
செய்திகள்அரசியல்இலங்கை

2026-ஆம் ஆண்டு இலங்கையின் பாரிய வீட்டு நிர்மாண ஆண்டு: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பிரகடனம்!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறிய மக்களுக்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ்,...