சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன
அரசியல்இலங்கைசெய்திகள்

‘சூம்’ வழியாக இன்று கட்சித் தலைவர்கள் கூட்டம்! – சபாநாயகர் அறிவிப்பு

Share

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தை ‘சூம்; தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக இவ்வாறு இணையவழியாக இந்தக் கலந்துரையாடலை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனச் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில், நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் அது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜிநாமா செய்துள்ள நிலையில், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவும் அமைதியின்மைக்குத் தீர்வு காணப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை மீண்டும் விசேடமாக நாடாளுமன்றத்தைக் கூட்டாதிருக்க சபாநாயகர் தீர்மானித்துள்ளார் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தையும் பிற்போடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், எம்.ஏ.சுமந்திரன், ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை முன்வைத்திருந்த நிலையில், இணைய வழி ஊடாகக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...