Dayasiri Jayasekara
அரசியல்இலங்கைசெய்திகள்

நிபந்தனைக்கு கட்டுப்பட்டாலே சந்திப்பு! – சுதந்திரக் கட்சி விடாப்பிடி

Share

தமது கட்சியால் விடுக்கப்பட்டுள்ள நிபந்தனையை ஜனாதிபதி ஏற்காதபட்சத்தில், அவர் தலைமையில் நாளை இடம்பெறவுள்ள சந்திப்பில் கலந்துகொள்ளமாட்டோம் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அரசிலிருந்து வெளியேறி, சுயாதீனமாக செயற்படும் முடிவை கடந்த 05 ஆம் திகதி சுதந்திரக்கட்சி எடுத்தது.

எனினும், அக்கட்சியின் சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் அரசுக்கு ஆதரவு வழங்கி, இராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டனர்.

இவ்விருவரையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்குமாறும், அவ்வாறு இல்லாவிட்டால் நாளை(29) நடைபெறவுள்ள கலந்துரையாடலில் கலந்துகொள்ளாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சர்வக்கட்சி அரசு அமைப்பது சம்பந்தமாக பேச்சு நடத்துவதற்காக அரச மற்றும் சுயாதீன அணிகளுக்கு ஜனாதிபதி நாளை அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...