tamilni 183 scaled
இலங்கைசெய்திகள்

மூடநம்பிக்கைகளினால் நாட்டு மக்களுக்கு ஆபத்து

Share

நாட்டில் நிலவி வரும் மூட நம்பிக்கைகளினால் நாட்டு மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மூட நம்பிக்கைகளின் காரணமாக 7500 குழந்தைகளுக்கு தட்டம்மை நோய் தடுப்பூசி ஏற்றப்படவில்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத காரணத்தினால் நாட்டில் 22 மில்லியன் சனத்தொகைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தட்டம்மை நோய்க்கான தடுப்பூசி ஏற்றிக் கொள்ளத்தேவையில்லை என சமூகத்தில் மூட நம்பிக்கை நிலவி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் தட்டம்மை மீண்டும் தலைதூக்கும் அபாயம் உருவாகியுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தட்டம்மை நோய்த்தொற்று தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத சுமார் 7500 குழந்தைகள் இருப்பதாக தொற்று நோய் விஞ்ஞான ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

தங்களது பிள்ளைகள் தட்டம்மை தடுப்பூசி ஏற்றிக்கொள்ளும் வயதுடையவர்கள் என்றால் உடனடியாக மாகாண தடுப்பூசி ஏற்றும் நிலைகளுக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி ஏற்றிக் கொள்ளுமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...