சன்ன ஜயசுமன
இந்தியாஇலங்கைசெய்திகள்

இலங்கைக்கு இந்தியாவால் மருத்துவ உதவிகள்!

Share

இலங்கைக்கு மருத்துவ உதவிகளை இந்தியா அனுப்ப முடிவு செய்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், மருந்துகள் மற்றும் மருத்துவ தளபாடங்கள் இல்லாமல் வைத்தியசாலைகள் முடங்கி கிடக்கின்றன. எனவே, இலங்கைக்கு மருத்துவ தளபாடங்கள் மற்றும் மருந்துகளை அனுப்பி வைக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இதை இலங்கையின் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன உறுதி செய்துள்ளார். 101 வகையான மருந்துகள் மற்றும் மருத்துவ தளபாடங்கள் அடங்கிய தொகுப்பு ஒன்று, இந்திய கடற்படை கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளது என்றும், இது எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கையை வந்தடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதைப்போல, 34 கோடி இலங்கை ரூபா மதிப்பிலான அத்தியாவசிய மருந்துகளை, இந்தோனேஷியாவும் அனுப்பவுள்ளது என்றும், அது ஒரு வாரத்துக்குள் இலங்கையை வந்தடையும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

#SriLanka&IndianNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...