13
இலங்கைசெய்திகள்

கொழும்பு நகரின் 15 இடங்களில் மே தினக்கூட்டங்கள்

Share

கொழும்பு நகரின் 15 இடங்களில் இன்றைய தினம் மே தினக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

சர்வதேச தொழிலாளர் தினமான மேதினம் இன்றாகும். இலங்கையில் மே தினம் சம்பிரதாயபூர்வமாக அனுஷ்டிக்கப்படத் தொடங்கி 139 வருடங்கள் இன்று பூர்த்தியாகின்றது.

கடந்த 1956ம் ஆண்டு பதவிக்கு வந்த பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கமே இலங்கையில் மே தின நிகழ்வுகளுக்கு முதன்முதலாக அரச அனுசரணை வழங்கியதுடன், மே தினத்தை விடுமுறை தினமாகவும் அறிவித்தது.

ஆரம்ப காலங்களில் தொழிலாளர் அமைப்புகளால் கொண்டாடப்பட்ட மே தின நிகழ்வுகள் தற்போது அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

அந்த வகையில் இந்த ஆண்டின் மேதின நிகழ்வுகளை முன்னிட்டு கொழும்பில் 15 இடங்களில் மேதின கூட்டங்கள், ஊர்வலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கொழும்புக்கு வெளியிலும் ஒருசில அரசியல் கட்சிகளின் மே தின நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...

Featured mm
இலங்கை

பெக்கோ சமன் தாயார் படுகொலை – பின்னணியில் பழிவாங்கும் படலம்!

பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின்...