வன்முறை
அரசியல்இலங்கைசெய்திகள்

‘மே 9’ வன்முறையில் மேலுமொருவர் சாவு!

Share

இம்மாதம் 9 ஆம் திகதி கொழும்பு – கொள்ளுப்பிட்டி பெரஹர மாவத்தை மற்றும் பேர வாவிக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள நடைபாதையில் ஏற்பட்ட அமைதியின்மையின்போது தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்திருந்த ஒருவர் உயிரிழந்தார்.

குளியாப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த 47 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்குள்ளான குறித்த நபர் கடந்த 9ஆம் திகதி ராகமை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்தநிலையில், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 16ஆம் திகதி உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தலை மற்றும் மார்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உயிரிழந்தார் என்று பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைதுசெய்ய கொள்ளுப்பிட்டிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...