மே 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த இரண்டு சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான தாரக பாலசூரிய மற்றும் கீதா குமாரசிங்க ஆகியோரின் வீடுகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேகாலை பிரதேசம் மற்றும் ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த 51 மற்றும் 48 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
#SriLankaNews