12 10
இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முரணான கருத்துக்கள்.. அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் அரசு!

Share

உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் சமீபத்திய கூட்டத்தின் போது கூறப்படாத கருத்துக்கள் குறித்து, தவறான தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று(09) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குழுவின் எந்த உறுப்பினருக்கும் உள் விவாதங்களை ஊடகங்களுக்கு வெளியிட நெறிமுறை உரிமை இல்லை என்று அமைச்சர் ஹேரத் கூறியுள்ளார்.

சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவது நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் தேசிய நலன்களைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தவறான தகவல்களைப் பரப்பியவர்கள் மற்றும் ஊடகங்களுக்கு அதை வழங்கியவர்கள் இருவருக்கும் எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இந்தியாவின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்டதாகவோ அல்லது மூளையாகச் செயல்பட்டவர் இந்தியாவுடன் தொடர்புடையவர் என்றோ செயலாளர் ரவி செனவிரத்ன எந்த நேரத்திலும் கூறவில்லை என்பதை ஹேரத் இதன் போது தெளிவுபடுத்தினார்.

எனவே இந்த அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்ட வலுவான இராஜதந்திர உறவுகளை சேதப்படுத்தும் நோக்கில், கூறப்பட்ட முற்றிலும் தவறான கதை இது, என்றும் அவர் தமது உரையில் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Government Unveils Plans to Boost Domestic Aviation in Support of Tourism
இலங்கைசெய்திகள்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க உள்நாட்டு விமான சேவைகள் விரிவாக்கம்: அமைச்சர் அனுர கருணாதிலக்க உறுதி!

இலங்கையின் சுற்றுலாத்துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், உள்நாட்டு வானூர்தி போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய...

94745991
செய்திகள்உலகம்

சிரியாவில் அமெரிக்காவின் ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்: ஐஎஸ் இலக்குகள் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்!

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பினரை இலக்கு வைத்து, அமெரிக்கப் படைகள் மற்றும் அதன்...

default
உலகம்செய்திகள்

ஈரானில் 14-வது நாளாகத் தொடரும் போராட்டம்: 116 பேர் உயிரிழப்பு; போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை எச்சரிக்கை!

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய மக்கள் போராட்டம்,...

1185212 anbu
செய்திகள்இலங்கை

யாருடன் கூட்டணி? – ராமதாஸ் இன்று சென்னை வருகை; நாளை வெளியாகிறது அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) கூட்டணி நிலைப்பாடு...