1 2
இலங்கைசெய்திகள்

முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம்: விலைகளில் பெரும் மோசடி

Share

முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம்: விலைகளில் பெரும் மோசடி

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இம்மாதம் நடுப்பகுதியில் மீண்டும் முட்டை விலையை உயர்த்த கோழிப்பண்ணை உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நாட்களில் சில்லரை விலையில் ஒரு முட்டை 35 ரூபாய் முதல் 37 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

இருப்பினும், கோழிப்பண்ணைகளில் 28 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையிலான விலையில் வாங்கப்படும் முட்டை, சில்லறை வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்களால் அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு முட்டையின் உற்பத்திச் செலவு 34 ரூபாயாக உயர்ந்துள்ளதால், முட்டை விற்பனையில் உற்பத்திச் செலவைக் கூட ஈடுகட்ட முடியாமல் பண்ணை உரிமையாளர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கோழித் தீவனமாக வழங்கப்படும் ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 80 ரூபாவாக இருந்ததாகவும், தற்போது அரிசி ஆலைகளில் அரிசி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் ஒரு கிலோ வெள்ளை அரிசி 140 ரூபாவாக அதிகரித்துள்ளது.

மேலும்,140 ரூபாவாக இருந்த ஒரு கிலோ சோளத்தின் விலையும் 170 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கோழி தீவனத்தின் விலை உயர்வு மற்றும் முட்டை விலை குறைப்பினால் தங்களின் வருமானம் சரிந்துள்ளதாக சிறு மற்றும் நடுத்தர கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், பின்னணியில் பெரிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...