1 2
இலங்கைசெய்திகள்

முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம்: விலைகளில் பெரும் மோசடி

Share

முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம்: விலைகளில் பெரும் மோசடி

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இம்மாதம் நடுப்பகுதியில் மீண்டும் முட்டை விலையை உயர்த்த கோழிப்பண்ணை உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நாட்களில் சில்லரை விலையில் ஒரு முட்டை 35 ரூபாய் முதல் 37 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

இருப்பினும், கோழிப்பண்ணைகளில் 28 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையிலான விலையில் வாங்கப்படும் முட்டை, சில்லறை வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்களால் அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு முட்டையின் உற்பத்திச் செலவு 34 ரூபாயாக உயர்ந்துள்ளதால், முட்டை விற்பனையில் உற்பத்திச் செலவைக் கூட ஈடுகட்ட முடியாமல் பண்ணை உரிமையாளர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கோழித் தீவனமாக வழங்கப்படும் ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 80 ரூபாவாக இருந்ததாகவும், தற்போது அரிசி ஆலைகளில் அரிசி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் ஒரு கிலோ வெள்ளை அரிசி 140 ரூபாவாக அதிகரித்துள்ளது.

மேலும்,140 ரூபாவாக இருந்த ஒரு கிலோ சோளத்தின் விலையும் 170 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கோழி தீவனத்தின் விலை உயர்வு மற்றும் முட்டை விலை குறைப்பினால் தங்களின் வருமானம் சரிந்துள்ளதாக சிறு மற்றும் நடுத்தர கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், பின்னணியில் பெரிய அளவிலான கோழிப்பண்ணை உரிமையாளர்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...