10 23
இலங்கைசெய்திகள்

தமிழருக்கான நீதியை பெற கனடா தொடர்ந்து முயற்சிக்கும்.. மார்க் கார்னி உறுதி!

Share

தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், “இலங்கையில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்ற போரின் ஆயுத மோதல் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இந்த தமிழ் இனப்படுகொலை நினைவு நாளில், இழந்த உயிர்களை – துண்டாடப்பட்ட குடும்பங்களை, பேரழிவிற்குள்ளான சமூகங்கள் மற்றும் இன்றுவரை காணாமல் போனவர்களை நினைவு கூருகிறோம்.

கனடாவின் தமிழ் சமூகத்தையும் நாங்கள் நினைவு கூருகிறோம், அவர்கள், தங்களது அன்புக்குரியவர்களின் நினைவையும், கனடா முழுவதும் திட்டமிடப்பட்ட பல நினைவுச் சேவைகளையும் கொண்டு செல்கிறார்கள்.

எனவே, தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறலைத் தேடுவதற்கும் உண்மை மற்றும் நீதிக்காக அழுத்தம் கொடுப்பதற்கும் சுயாதீனமான சர்வதேச முயற்சிகளை கனடா தொடர்ந்து ஆதரிக்கிறது.

இந்த புனிதமான ஆண்டு நிறைவை நாம் நினைவுகூரும் வேளையில், அஞ்சலி செலுத்தும் விதமாகவும், தைரியத்துடனும், நீடித்த அமைதிக்காகவும் செயல்படுவதற்கான நமது உறுதியை வலுப்படுத்தட்டும்” என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...