peris
அரசியல்இலங்கைசெய்திகள்

ஒரு அரசுக்குள் பல அரசுகள் செயற்பட முடியாது! – மைத்திரிக்கு பதிலடி

Share

“அரசுக்குள் இருந்துகொண்டு எதிரணி வேலையை செய்யமுடியாது. அதேபோல ஒரு அரசுக்குள் பல அரசுகள் செயற்படவும் முடியாது.”

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“அரசுக்குள் இருந்துகொண்டு விமர்சனங்களை முன்வைக்க முடியும். எனவே, விமர்சனங்களை முன்வைப்பவர்களை விலக்குவதற்கு பதிலாக, தீர்வுகளை வழங்குவதே பொருத்தமான நடவடிக்கையாகும்.” என்று அரச தலைவர் பதவியை வகித்த ஒருவர் (மைத்திரிபால சிறிசேன) விமர்சித்துள்ளார். அவரின் இந்த கருத்துடன் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உடன்படாது.

விமர்சிக்கும் உரிமை இருக்கின்றது. ஆனால் அதற்கு பொருத்தமான இடங்களும் உள்ளன. அரசுக்குள் உள்ள பிரச்சினைகளை நாடாளுமன்றக்குழுக் கூட்டங்கள் மற்றும் அமைச்சரவையில் சுட்டிக்காட்டலாம். அல்லது தலைவர்களை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து பேசலாம். அதனைவிடுத்து பொதுவெளியில் விமர்சிப்பது ஏற்புடைய நடவடிக்கையாக அமையாது.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...