peris
அரசியல்இலங்கைசெய்திகள்

ஒரு அரசுக்குள் பல அரசுகள் செயற்பட முடியாது! – மைத்திரிக்கு பதிலடி

Share

“அரசுக்குள் இருந்துகொண்டு எதிரணி வேலையை செய்யமுடியாது. அதேபோல ஒரு அரசுக்குள் பல அரசுகள் செயற்படவும் முடியாது.”

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“அரசுக்குள் இருந்துகொண்டு விமர்சனங்களை முன்வைக்க முடியும். எனவே, விமர்சனங்களை முன்வைப்பவர்களை விலக்குவதற்கு பதிலாக, தீர்வுகளை வழங்குவதே பொருத்தமான நடவடிக்கையாகும்.” என்று அரச தலைவர் பதவியை வகித்த ஒருவர் (மைத்திரிபால சிறிசேன) விமர்சித்துள்ளார். அவரின் இந்த கருத்துடன் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உடன்படாது.

விமர்சிக்கும் உரிமை இருக்கின்றது. ஆனால் அதற்கு பொருத்தமான இடங்களும் உள்ளன. அரசுக்குள் உள்ள பிரச்சினைகளை நாடாளுமன்றக்குழுக் கூட்டங்கள் மற்றும் அமைச்சரவையில் சுட்டிக்காட்டலாம். அல்லது தலைவர்களை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து பேசலாம். அதனைவிடுத்து பொதுவெளியில் விமர்சிப்பது ஏற்புடைய நடவடிக்கையாக அமையாது.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...