25 684578d12b30a Recovered Recovered
இலங்கைசெய்திகள்

அநுரவுக்கு தொடரும் சிக்கல் – மோசடியான முறையில் விடுதலையான பலர்

Share

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் கீழ் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் ஆபத்தான கைதி ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் கடந்த வருட கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடாளவிய ரீதியிலுள்ள சிறைச்சாலையில் இருந்து ஜனாதிபதி மன்னிப்புக்கு தகுதியற்ற 26 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சில சிறைச்சாலைகளின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட மோசடி நடவடிக்கைகள் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மன்னிப்பை பயன்படுத்தி அனுராதபுரத்தை சேர்ந்த திலகரத்ன என்ற சந்தேக நபர் சட்டவிரோதமாக விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
dengue original
இலங்கை

மீண்டும் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் – உயர்வடையும் உயிரிழப்புகள்.

இலங்கையில் இந்த வருடம் இது வரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,839 ஆக...

Boossa Prison 1
இலங்கை

பாரிய கற்களை கொண்டு அதிகாரிகள் மீது தாக்குதல் – பூஸா சிறையில் கைதி மரணம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை தொடர்ந்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்....

001111
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தில் அலட்சியப்படுத்தப்பட்டதா புலனாய்வுத் துறையின் தகவல்கள்?

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் இடம்பெறுவதற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்பே புலனாய்வுப் பிரிவுகள் மூலம்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...