15 7
இலங்கைசெய்திகள்

இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு

Share

இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு

இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

75ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு இந்த பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை இராணுவத்தின் 402 அதிகாரிகளும், 1,273 இதர நிலைகளில் உள்ளவர்களும் அவர்களின் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெறவுள்ளனர்.

1949 ஒக்டோபர் மாதம் 10ம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை இராணுவமானது அன்றிலிருந்து இன்று வரை தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கடமையினை சிறப்பாக செய்துவருவதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை இராணுவத்திற்கு, தேசத்திற்காய் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கள் மற்றும் கடமைகளுக்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த 75 வருடங்களாக தேசத்தை பாதுகாக்கும் பொருட்டு உயிர் தியாகம் செய்த வீரர்கள் மற்றும் முழுமையாக ஊனமுற்ற சகல வீரர்களையும் கௌரவத்துடன் நினைவுகூர்ந்துள்ளார்.

75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை இராணுவம் பல நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...