இலங்கைசெய்திகள்

இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு

Share
15 7
Share

இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு

இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

75ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு இந்த பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை இராணுவத்தின் 402 அதிகாரிகளும், 1,273 இதர நிலைகளில் உள்ளவர்களும் அவர்களின் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெறவுள்ளனர்.

1949 ஒக்டோபர் மாதம் 10ம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை இராணுவமானது அன்றிலிருந்து இன்று வரை தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கடமையினை சிறப்பாக செய்துவருவதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை இராணுவத்திற்கு, தேசத்திற்காய் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கள் மற்றும் கடமைகளுக்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த 75 வருடங்களாக தேசத்தை பாதுகாக்கும் பொருட்டு உயிர் தியாகம் செய்த வீரர்கள் மற்றும் முழுமையாக ஊனமுற்ற சகல வீரர்களையும் கௌரவத்துடன் நினைவுகூர்ந்துள்ளார்.

75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை இராணுவம் பல நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...