manar boy 5656
இலங்கைசெய்திகள்

மன்னார் சிறுவன் உயிரிழப்பு – நால்வர் கைது!

Share

மன்னார் மாந்தை மேற்கு இலுப்பைக் கடவை பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தூக்கிட்ட நிலையில், அவரது வீட்டிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் அதே இடத்தைச் சேர்ந்த 16 வயது முதல் 22 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிறுவன் கள்ளியடி பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் அரிசி திரிக்க சென்ற நிலையில் அங்கு பணம் திருடினான் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் அரிசி ஆலை உரிமையாளரின் மகன் மற்றும் நண்பர்கள் சிலர் இணைந்து குறித்த சிறுவனின் வீட்டுக்கு சென்று சிறுவனை தாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் மகனை நித்திரையாக்கிவிட்டு தாயார் குளிக்க சென்ற நிலையில் தாக்கியவர்கள் மீண்டும் அவர்களது வீட்டில் இருந்து செல்வதை அவதானித்த தாய் ஓடி வந்து பார்த்தபோது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தான் என தாயார் தெரிவித்துள்ளார்.

இது தற்கொலை இல்லை எனவும் மகன் தற்கொலை செய்யும் அளவுக்கு விவரம் தெரியாதவன் இல்லை எனவும் அவனது தாய் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த நால்வர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நால்வரையும் இலுப்பைக்கடவை பொலிஸார் மன்னார் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Pregnant Child 1200px 25 07 18 1 1000x600 1
செய்திகள்இலங்கை

கர்ப்பிணித் தாய்மார்கள் போதைப்பொருள் பாவனை: குழந்தைகளின் அபாயம் குறித்து அமைச்சர் சரோஜா போல்ராஜ் எச்சரிக்கை!

சமீபகாலமாகப் பெண்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது அதிகரித்து வருவதாகவும், குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

Nine Arch Bridge Ella Sri Lanka 35 1
செய்திகள்இலங்கை

ஒன்பது வளைவுப் பாலம் விளக்குத் திட்டம் ஒத்திவைப்பு: தனியாரின் நிலப் பிரச்சினை காரணம்!

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில்...

articles2FjYITDpH4jwEQ9VfnNT42
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் புதிய கிளை அலுவலகம் இன்று திறந்து வைப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் கிளைக்கான புதிய அலுவலகம் இன்று (நவம்பர் 23) காலை,...

images 5 1
செய்திகள்உலகம்

லண்டனில் பலஸ்தீன ஆதரவுக் குழு தடையை எதிர்த்துப் போராட்டம்: 90 பேர் கைது!

பிரித்தானிய அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவொன்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அதற்கு...