14 25
இலங்கைசெய்திகள்

56 சிறுமிகளின் தகாத புகைப்படங்களை வைத்திருந்த நபர் கைது

Share

அநுராதபுரத்தில் 56 சிறுமிகளின் தகாத புகைப்படங்களைப் பெற்று வைத்திருந்த ஒருவர், குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அதிகார சபையின் இணைய சேவையாளராக நடித்து, டெலிகிராம் கணக்கு மூலம் இந்த புகைப்படங்களை அவர் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

56 சிறுமிகளும் 17 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கண்டி பகுதியில் உயர்தர வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களை குறிவைத்து, 2027 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவிகள் அடங்கிய டெலிகிராம் குழுக்களை இந்த நபர் அணுகியுள்ளார்.

அங்கு பெறப்பட்ட தொலைபேசி எண்கள் மூலம் அந்த சிறுமிகளை தொடர்பு கொண்டதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

அந்த தொலைபேசி எண்கள் மூலம் சிறுமிகளை தொடர்பு கொண்ட சந்தேக நபர், தன்னை ஒரு பெண் போன்று காட்டிக் கொண்டுள்ளார்.

சிறுமிகளின் தகாத புகைப்படங்கள் இணையத்தில் இருப்பதாகவும், சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அதிகார சபையின் ஒன்லைன் சேவைக்குத் தெரிவித்து அவற்றை அகற்ற வேண்டும் எனவும் அவர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் அதிகாரசபையின் அதிகாரியாகக் காட்டிக் கொண்டு ஒரு மோசடி கணக்கை உருவாக்கி, அதைப் பயன்படுத்தி சிறுமிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை வழங்கவும், தகாத புகைப்படங்களை பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், இவ்வாறு தரவுகளையும் தகாதபு கைப்படங்களையும் பதிவிறக்கம் செய்த 56 சிறுமிகள் பற்றிய தகவல்கள் சந்தேக நபரின் கணினியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...