body scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வாடிகானுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு!

Share

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி நகரில் வீதியோர வாடிகானுக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

எனினும், சடலமாக மீட்கப்பட்ட நபர் யார் என்பது தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என மதுரங்குளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரங்குளி பகுதியில் டீசல் பெறுவதற்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுதப்பட்டுள்ள நிலையில் அதனை அண்டிய வடிகானுக்குள் இருந்தே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வடிகானுக்குள் சடலம் ஒன்று கிடப்பதாக மதுரங்குளி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற மதுரங்குளிப் பொலிஸார், விசாரனைகளை ஆரம்பித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர், டீசல் கொள்வனவு செய்ய வந்தவரா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் சம்பவ இடத்துக்கு வருகை தந்து விசாரணைகளை தடத்தினர்.

அத்துடன், நீதிவான் விசாரணையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் தடயவியல் பிரிவினருடன் இணைந்து மதுரங்குளிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...