2 2
இலங்கைசெய்திகள்

தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வாக்குமூலம்

Share

தற்கொலைத் தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(28) வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு பொரலஸ்கமுவை பிரதேசத்தில் அப்போதைய அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் குறித்த வழக்கின் சாட்சிகளில் ஒருவராக மைத்திரிபால சிறிசேனவும் பெயரிடப்பட்டிருந்தார்.

இரண்டு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...