image 839728b484
இலங்கைசெய்திகள்

ஒழுக்கத்தைப் பேணுங்கள்! – பொலிஸ்மா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு

Share

சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுவதற்கும் அமைதியைப் பேணுவதற்கும் பொலிஸாரின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கு பொலிஸ்மா அதிபர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த வார இறுதியில் பாணந்துறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கட்டுப்படுத்தியமைக்கான காரணங்களை நியாயப்படுத்துமாறும் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

களுத்துறை தலைமைப் பரிசோதகர் இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களையும் ஒரு பெண்மணியையும் தள்ளிய சம்பவம் குறித்தும், அமைதிப் பேரணியை சட்டவிரோதமாக தடுத்து நிறுத்தி, பங்கேற்பாளர்களைக் கைது செய்யுமாறும் உத்தரவு பிறப்பித்தமை தொடர்பில் தானாக முன்வந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று ஆணைக்குழு முன்னிலையில் பாணந்துறை பொலிஸ் தலைமைப் பரிசோதகரால் ஒப்புக் கொள்ளப்பட்டதன் பிரகாரம் களுத்துறையில் இருந்து ஆரம்பமான ஒரு அமைதியான அணிவகுப்பு பாணந்துறையில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அணிவகுப்பை கட்டுப்படுத்தியதற்கான காரணம் மற்றும் யாருடைய கட்டளை அல்லது உத்தரவின் பேரில் பொலிஸார் அணிவகுப்பை நிறுத்தினார்கள், யார் அந்த கட்டளைகள் அல்லது உத்தரவுகளை நிறைவேற்றினார்கள் மற்றும் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக பொலிஸாரால் தொடங்கப்பட்ட நடவடிக்கை போன்றவற்றை வாக்கு மூலமொன்றின் மூலம் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தப்பட்டார்.

பாணந்துறை பொலிஸ் பிரிவிற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேவையான கட்டளைகளை வழங்கி பேரணியில் பங்குபற்றுபவர்களை பாதுகாக்க தவறியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அவதானித்துள்ளது.

அண்மைக் காலமாக பொலிஸாரின் பொருத்தமற்ற நடத்தை ஏற்கனவே மக்களின் நம்பிக்கையை அழித்துள்ளதுடன், சர்வதேச ரீதியில் நாட்டின் நன்மதிப்பை விரைவாக அழித்து வருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...