Mahindanatha aluthkamake
இலங்கைஅரசியல்செய்திகள்

அநுரகுமார திஸாநாயக்கவை வம்புக்கு இழுக்கும் மஹிந்தானந்த!

Share

இலங்கையில் கடந்த 7 மாதங்களாக எல்லா இடங்களிலும் என்னைப் பற்றிதான் பேச்சு. எனது கொடும்பாவிகளை எரித்தனர். திட்டி தீர்த்தனர். ஆனாலும், நஞ்சற்ற விவசாயம் என்ற கொள்கையில் இருந்து பின்வாங்கமாட்டேன்.” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“கொரோனா பெருந்தொற்றால் சர்வதேச சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. அதனால்தான் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் இங்கும் அதிகரித்துள்ளன. இந்நிலைமை நீடிக்காது. மார்ச், ஏப்ரல் ஆகும்போது சாதாரண நிலைக்கு வந்துவிடும்.

நாட்டு மக்கள் தற்போது அரசை விமர்சிக்கின்றனர். அது மக்களுக்குள்ள உரிமை. ஆனால் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திதான், தான் ஜனாதிபதி என்ற நினைப்பு அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வந்துவிட்டது. 5 அடி உயரம்கூட இல்லை.

அவர் ஜனாதிபதியாகிவிட்டார். அந்த நினைப்பில் மகாநாயக்க தேரர்களையும் சந்திக்க சென்றுவிட்டனர்.

சேதன பசளை மூலமான விவசாயம் என்ற ஜனாதிபதியின் திட்டம் சிறப்பானது. அந்த திட்டத்தை நான் செயற்படுத்துவேன். எதிர்ப்புகளுக்கு அஞ்சி, ஒளியமாட்டேன். ” – என்றார்.

#SrilankaNews

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...