சி.பி.ரத்நாயக்க
அரசியல்இலங்கைசெய்திகள்

எந்தச் சந்தர்ப்பத்திலும் மஹிந்த பதவி விலகார்! – சி.பி. திட்டவட்டம்

Share

“எமது தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச எந்தச் சந்தர்ப்பத்திலும் பதவி விலகமாட்டார்.”

– இவ்வாறு முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.

பிரதமரைப் பதவி விலகக் கோரும் சுயாதீன எம்.பிக்கள், தேர்தல் மேடைகளில் அவரின் படத்தை ஏந்தியவாறு பிரசாரம் செய்துதான் வெற்றியடைந்தார்கள் என்பதை மறக்கக்கூடாது எனவும் அவர் நினைவுபடுத்தினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதேச சபைத் தவிசாளர்கள், நகர சபைத் தலைவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரத்நாயக்க எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்துவதில் சிலர் குறியாகவுள்ளனர். அவர்களின் சுயலாப அரசியல் எளிதில் எடுபடாது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிலிருந்து எவர் வெளியேறினாலும் எமது கட்சி பலம் இழக்காது.

எமது தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கைகளை நாம் தொடர்ந்து பலப்படுத்துவோம். அவரைப் பதவி விலகக் கோர எவருக்கும் உரிமை இல்லை.

கொடிய பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்ட ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்சவே” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...

592732937 1280508897442061 4469225105931887604 n
இலங்கை

அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 100 இலட்சம் நன்கொடை: இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் ஜனாதிபதிச் செயலரிடம் கையளிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக,...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...