WhatsApp Image 2022 04 13 at 12.38.25 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

மக்களின் போராட்டத்தைத் திசை திருப்ப மஹிந்த முயற்சி! – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

Share

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பதே போராட்டக்களத்தில் உள்ள மக்களின் ஏகோபித்த கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், போராட்டத்தின் நோக்கத்தைத் திசை திருப்பவும், போராட்டக்காரர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவதற்காகவுமே பிரதமர் மஹிந்த ராஜபக்ச பேச்சுக்கு அழைத்துள்ளார்.”

– இவ்வாறு ஜே.வி.பி யின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் இளைஞர்களும் யுவதிகளும் இணைந்து கடந்த 9ஆம் திகதி கொழும்பு – காலிமுகத்திடலில் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இந்தப் போராட்டத்தை முதலில் பொருட்படுத்தாது இருந்த அரசு, பின்னர் அச்ச சூழலை உருவாக்கி அந்தப் போராட்டத்தைக் குழப்புவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

அது சாத்தியமாகாத பட்சத்தில் அடிப்படைவாத பிரச்சினை ஒன்றைத் தோற்று வைப்பதன் ஊடாக அந்தப் போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைத்து விடலாம் என்று எண்ணி இருந்தது.

இவ்வாறான முயற்சிகள் தோல்வி அடைந்ததன் பின்னணியிலேயே தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ச போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கின்றார். உண்மையில் இது போராட்டத்தைத் திசை திருப்புவதற்கான முயற்சியாகவே காணப்படுகின்றது.

நாட்டு மக்கள் இன்று கோரி நிற்பதானது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது தலைமையிலான அரசு பதவி விலகிச் செல்ல வேண்டும் என்பது மாத்திரமேயாகும்.

போராட்டத்தின் தொனிப்பொருளை உணர்ந்துகொள்ளாது பேச்சுக்கு தயார் என்பது போராட்டத்தைத் திசை திருப்புவதாகவே அமையும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...