tamilni 83 scaled
இலங்கைசெய்திகள்

மத வழிபாடுகளில் நாட்டம் காட்டும் மகிந்த

Share

மத வழிபாடுகளில் நாட்டம் காட்டும் மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மத வழிபாடுகளில் அதிக நாட்டம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில காலங்களாக மிகவும் மௌனமான போக்கினை பின்பற்றி வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அண்மைய தினங்களாக பௌத்த விகாரைகள், கோயில்கள் என பல்வேறு மத வழிபாட்டு தலங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.

தேர்தல் தோல்வியின் பின்னர் இதேவிதமாக மகிந்த மத வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினமும் அழுத்மாவத்தை விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “எந்த நாளும் தலைமை பதவியில் நீடிக்க முடியாது, இளைய தலைமுறையினருக்கு அவற்றை கொடுக்க வேண்டும்.

நிச்சயமாக மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படாத அரசாங்கத்தினால் பயனில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து விடயங்களையும் நாம் பின்பற்ற வேண்டிய அவசியம் கிடையாது” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...