4 12
இலங்கைசெய்திகள்

நாமல் குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்ட மகிந்தவின் சகா

Share

நாமல் குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்ட மகிந்தவின் சகா

மக்களினதோ அல்லது கட்சியினதோ தேவைக்கு அமைய நாமல் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச பெயரிடப்பட்டமை குறித்து அவர் இவ்வாறு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கும், 2022 ஆம் ஆண்டு கலவரங்களுக்கும் நாமல் ராஜபக்சவும் பொறுப்பு சொல்ல வேண்டுமென குற்றம் சுமத்தியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவை விடவும் அவரது புதல்வர் நாமல் ராஜபக்ச மீதே மக்களுக்கு அதிக கோபம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது சஜித்திற்கு மறைமுகமாக உதவும் செயற்பாடாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை தாம் சந்தித்த போது “நாமலுக்கு விசர்” என மகிந்த கூறியதாக பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....