25 2
இலங்கைசெய்திகள்

மகிந்த ராஜபக்ச தூக்கிலிடப்பட வேண்டும்! விமல் பரபரப்பு கருத்து

Share

முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் போன்சேகா கூறுவது போன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தூக்கிலிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை தூக்கிலிட வேண்டும் என அண்மையில் கருத்து வெளியிட்டு இருந்தார்.

இந்த கருத்து தொடர்பில் ஊடகங்களிடம் விமல் வீரவன்ச தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இது குறித்து விமல் வீரவன்ச கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

சரத் பொன்சேகா போன்ற ஓர் மோசமான நபரை ஓய்வு பெற்றுக் கொள்வதற்கு 10 நாட்களுக்கு முன்னர் இராணுவ தளபதியாக நியமித்தமைக்காகவே மகிந்தவை தூக்கிலிட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான மோசமான ஓர் நபருடன் இணைந்து யுத்தத்தை வழி நடத்தியமை தொடர்பில் மகிந்தவிற்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

பொன்சேகா போன்ற தீயவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியமைக்காக மகிந்த தண்டிக்கப்பட வேண்டியவரே என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
24 2
இலங்கைசெய்திகள்

திருமணத்திற்கு பணம் திரட்டுவதற்காக இளைஞர்கள் செய்த மோசமான செயல்

கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள பழங்கால விகாரையில் புரதான பித்தளை விளக்கை திருடிய குற்றச்சாட்டில் 3 பேர்...

21 2
இலங்கைசெய்திகள்

நாட்டை மீட்க அர்ப்பணிப்பான சர்வதிகாரி தேவை : வலியுறுத்தும் சரத் பொன்சேகா

இலங்கையை மீட்பதற்கு, நாட்டை நேசிக்கக்கூடிய – அர்ப்பணிப்பான சர்வாதிகாரி அவசியம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்...

23 2
இலங்கைசெய்திகள்

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள்பரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது....

22 2
இலங்கைசெய்திகள்

ஆளும் கட்சிக்கு எதிரான வழக்கு! யாரும் எதிர்ப்பார்க்காத நீதிபதியின் முடிவு

கம்பஹா, யக்கலையில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் அலுவலகமொன்றை ஜே.வி.பி.யினர் அபகரித்த விவகாரம் தொடர்பான வழக்கு...