tamilni 330 scaled
இலங்கைசெய்திகள்

நாமலை வழி நடத்தும் மர்ம சக்தி

Share

நாமலை வழி நடத்தும் மர்ம சக்தி

கடந்த செவ்வாய்க்கிழமை வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்தார்.

ஆனால், சபைக்குள் செல்லாமல், எதிர்க்கட்சி அறை, ஆளும் கட்சி அறைகளுக்கு சென்று உறுப்பினர்களுடன் சுமுகமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டம், சமகால அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதியிடம் நம்பிக்கையுடன் உரையாடியமை சிறப்பான விடயமாக பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் ஆளுங்கட்சியின் முன்னிலையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய வேளையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இருந்த குழுவினருடனும் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, நீங்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக கூறியதாகவும், ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் அவரை விமர்சித்து வருவதாகவும் மகிந்தவிடம் தெரிவித்தார்.

யாரோ ஒருவரின் ஆலோசனையை பெற்று நாமல் இவ்வாறு செயற்படுவதாக மகிந்த, ரணிலிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தையும் பிரச்சினையின்றி நிறைவேற்ற முடியும் என்பது ஆளும் கட்சி உறுப்பினர்களின் கலந்துரையாடலின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...