11
இலங்கைசெய்திகள்

அநுரவை ஏமாற்றிய மகிந்த

Share

கொழும்பிலுள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியேறி 2 வாரங்களுக்கும் மேலாகியும், வீட்டை முறையாக ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது.

ஜனாதிபதிகளின் சிறப்பு சலுகைகளை நீக்கும் சட்டம் கடந்த 10 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்ச 24 மணி நேரத்திற்குள் விஜேராம மாவத்தையில் உள்ள அரசாங்க இல்லத்திலிருந்து வெளியேறி தங்காலையிலுள்ள தனது தனிப்பட்ட இல்லமான கார்ல்டன் இல்லத்திற்குச் சென்றார்.

இதன்போது இரண்டு வாரங்களுக்குள் வீட்டை உத்தியோகபூர்வமாக அரசாங்கத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மகிந்த ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இரண்டு வார கால அவகாசம் 24 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. இது தொடர்பாக நினைவூட்டல் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த வீட்டின் பட்டியலில் உள்ள பொருட்கள் ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமானவை எனவும் வீடு மற்றும் வளாகத்தின் உரிமை அமைச்சின் கீழ் உள்ளது எனவும் அந்த அதிகாரி கூறினார்.

விஜேராம மாவத்தையில் உள்ள வீடு மற்றும் பொருட்களை முறையாக ஒப்படைக்கக் கோரி, ஜனாதிபதி செயலாளர் என்.எஸ். குமநாயக்கவின் கையெழுத்திட்ட கடிதம், மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளருக்கு 24 ஆம் திகதி அனுப்பப்பட்டது.

அவருக்கு வழங்கப்பட்ட வாகனங்கள் முறையாக ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் அதே கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மகிந்தவுக்கு குண்டு துளைக்காத கார் மற்றும் லேண்ட் ரோவர் கார் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குண்டு துளைக்காத வாகனம் ஏற்கனவே பழுது பார்ப்புக்காக ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அவர்களின் மாதாந்த ஓய்வூதியத்துடன் கூடுதலாக வழங்கப்படும் செயலக கொடுப்பனவு மற்றும் மாதாந்திர அதிகபட்ச மதிப்பு 900 லிட்டர் எரிபொருளுக்கு உட்பட்டு செலுத்தப்படும் எரிபொருள் கொடுப்பனவு ஆகியவை 10 ஆம் திகதி முதல் செலுத்தப்படாது எனவும் ஜனாதிபதியின் செயலாளர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...