rtjy 26 scaled
இலங்கைசெய்திகள்

புலம்பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரில் பெரும் சதி!

Share

புலம்பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரில் பெரும் சதி!

புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரில் பெரும் சதி இடம்பெறுவதாக சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கிளை பொறுப்பாளர் ரகு தெரிவித்துள்ளார்.

மாவீரர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் செயலுக்கு பின்னர் சொல்லை வைத்தவர். இருப்பினும் தற்போது எமது புலம்பெயர் தேசங்களில் தலைவரின் பெயரினாலும், அவரது குடும்பத்தின் பெயராலும் முன்னெடுக்கப்படும் அனைத்தும் சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

எனவே புலம்பெயர் மக்கள் உண்மையான நிலவரங்களை அறிந்து சரியான முடிவினை எடுக்க வேண்டும்.

மேலும், எமது தேசிய போராட்டத்தையும், விடுதலைப்புலிகளின் தலைவரையும் அவரது குடும்பத்தினரையும், போராளிகளின் தியாகத்தையும், மக்களின் அர்ப்பணிப்பையும் சீர்குலைக்க சிலர் முயற்சித்து வருகின்றனர் எனவும், அதற்கு தமிழ் மக்களாகிய நாங்கள் விளிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

தாயகம் கோரிய உரிமைப்போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சுவிட்சர்லாந்தில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், சுவிட்சர்லாந்தில் ஒன்று திரண்ட பெருந்திரளான மக்கள் சுடரேற்றி உணர்வுபூர்வமாக தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை, ஏனைய புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் தின நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...