3 1 11
இலங்கைசெய்திகள்

மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிக்க சிறிநேசன் எம்.பி அரசிடம் கோரிக்கை

Share

மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிக்க சிறிநேசன் எம்.பி அரசிடம் கோரிக்கை

தமிழ் மக்களின் விடிவுக்காக போராடிய மாவீரர்களின் துயிலும் இல்லத்தினை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்கள் இம்முறை தமது உறவுகளை நினைவு கூருவதற்கான கெடுபிடிகள் இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் இன்றைய தினம் மட்டக்களப்பின் மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியதுடன் அங்கு முன்னெடுக்கப்படும் ஏற்பாடுகளையும் பார்வையிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், மாவீரர்களின் எண்ணங்களை மனதில் சுமந்தவாறு அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் எண்ணத்துடன் பொதுமக்கள் மாவடி முன்மாரிய மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

எமது மண்ணுக்காக, தமிழ் மக்களின் விடுதலைக்காக தமிழர்கள் இந்த மண்ணில் நிம்மதியாக சுதந்திரக்காற்றினை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக தமது உயிரை அர்ப்பணித்த தியாகதன்மை கொண்ட போராளிகளை நாங்கள் என்றும் மறக்ககூடாது.

அவர்களை மறப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். அந்த வகையில் 2024ஆம் ஆண்டில் கார்த்திகை மாதம் பிறந்துள்ளது.

அந்த மாதம் என்பது தமிழர்களினைப் பொறுத்த வரையில் அந்த தியாகத்தினை நினைவுகூரும் மாதமாகவுள்ளது. அந்த வகையில் இந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் அவர்களின் நினைவினை சுமந்தவாறு நின்றுகொண்டிருக்கின்றோம்.

இதேபோன்று தாண்டியடி, தரவை, கண்டலடி போன்ற இடங்களிலும் துயிலும் இல்லங்கள் காணப்படுகின்றன. இதில் தாண்டியது துயிலும் இல்லம் விசேட அதிரடிப்படையினரின் முகாமாகவுள்ளது.

ஜனநாயக ஆட்சி நடக்கின்ற காலத்தில் துயிலும் இல்லத்தினை இலங்கை இராணுவத்தினர் ஆக்கிரமித்து அதில் முகாம் அமைத்து சப்பாத்துகால்களின் கீழ் எமது உறவுகளின் சமாதியை தீண்டிக் கொண்டிருப்பது ஒரு அசிங்கமான செயற்பாடு.

முகாமிலிருந்து அவர்கள் அகற்றப்படவேண்டும் என்று நாங்கள் கோரியிருந்தோம். அகற்றுவோம் என்று சொன்னார்கள் இன்னும் அகற்றப்படவில்லை.

மாவடி முன்மாரியில் உள்ள மாவீரர் துயிலும் உள்ளத்திலிருந்த கல்லறைகள் அகற்றப்பட்டிருந்தாலும் இம்முறை இங்கு ஓரளவு சுதந்திரமாக நினைவேந்தலை செய்யக்கூடிய நிலைமைகள் ஏற்பட்டுள்ளது.

ஒரு விடிவுக்காக போராடியவர்களை நாங்கள் மலினப்படுத்தாமல் அவர்களின் மகத்துவத்தினை நாங்கள் நெஞ்சில் சுமக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...