19 17
இலங்கைசெய்திகள்

யாழில் போலி இலக்க தகட்டுடன் காணப்பட்ட சொகுசு கார் மீட்பு

Share

யாழில் போலி இலக்க தகட்டுடன் காணப்பட்ட சொகுசு கார் மீட்பு

போலி இலக்க தகட்டுடன் காணப்பட்ட சொகுசு கார் ஒன்று தெல்லிப்பழை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி வாகனம் சுன்னாகம் பகுதியில் மறைத்து வைத்திருந்த நிலையில், தெல்லிப்பழை பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலில் அடிப்படையில் நேற்று (20.10.2024) மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெல்லிப்பழை பொலிஸாரின் விசேட புலானாய்வு தகவலுக்கமைய தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி W.M.உதயபால தலமையில் மேற்படி கார் மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி, கார் குற்றச்செயல்களுக்கு அல்லது போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...