முக்கிய ஆதாரமாகும் பாலச்சந்திரன் மரணத்தின் அறிக்கை
இலங்கைசெய்திகள்

முக்கிய ஆதாரமாகும் பாலச்சந்திரன் மரணத்தின் அறிக்கை

Share

முக்கிய ஆதாரமாகும் பாலச்சந்திரன் மரணத்தின் அறிக்கை

விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படுகொலை செய்யப்பட்டாரா என்பதினை உறுதிசெய்யும் நோக்கிலேயே பகுப்பாய்வு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“பாலகன் பாலச்சந்திரனின் மரண விசாரணை தொடர்பில் பகுப்பாய்வு செய்தவர்கள் சுடு கள நிபுணர்கள் ஆவர். பாலச்சந்திரனின் மரணம் தொடர்பிலான புகைப்படம் மற்றும் படுகொலை சம்பவத்தை உறுதி படுத்துவதற்காகவே இவ்வாறான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் முல்லைதீவு மனிதப்புதைகுழி விவகார ஆய்வு நடவடிக்கைகளுக்கு இவ்வாறான பகுப்பாய்வுகள் தேவையில்லை. தொழிநுட்ப கருவிகளின் உதவியிலேயே இதனை மேற்கொள்ளலாம்.

முல்லைதீவு மனித புதைகுழி விவகாரதிற்கும் பாலச்சந்திரனின் மரண விசாரணனைக்கும் நிறைய வித்தியாசங்கள் காணப்படுகின்றன.

மேலும், இந்தியா, 13 திருத்தச்சட்டம் என அனைவரும் அரசியலின் பின்னே செல்வதால், இவ்வாறான நமது உறவுகளின் மரணங்கள் தொடர்பிலான நடவடிக்கைகளை மறந்து விடுகிறார்கள்.

அத்தோடு, முல்லைதீவு மனிதப்புதைகுழி எச்சங்கள் காணாமலாக்கப்பட்டோரின் மாதிரிகளோடு பொருந்துமாக இருந்தால் அது நமக்கு கிடைத்த மிக பெரியதொரு ஆதாரம்.

இவ்வாறான ஆதாரங்களை சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்ல முடியும். அல்லது சர்வதேச பரிந்துரைகளை பெற முடியும்.

அத்தோடு காணாமலாக்கப்பட்டோரின் போராட்டமே தமிழ் மக்களின் உயிர்ப்பு போராட்டமாக காணப்படுகிறது.” என தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1532860700 Two police officers arrested over assaulting two youths B
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பதற்றம்: இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் – இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி காவல் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதோடு,...

22 62a8366eaa932
செய்திகள்இலங்கை

பெண் அரச ஊழியர்களுக்கு Work From Home வசதி? – அமைச்சரவை மட்டத்தில் தீவிர ஆலோசனை!

இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார...

download 1 1
செய்திகள்விளையாட்டு

LA 2028 ஒலிம்பிக்: வெறும் 28 டொலர்களுக்கு நுழைவுச்சீட்டு – முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்!

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு முன்பதிவு...