Gas 2
இலங்கைசெய்திகள்

எரிவாயு விலைகள் குறைப்பு!

Share

12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் ரூ. 1005 ஆல் குறைக்கப்படுகிறது என லிட்ரோ லங்கா தலைவர் முடித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ரூ.3728 ஆகும். 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூ.402 ஆல் குறைக்கப்பட்டு ரூ. 1,502 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ரூ. 700 ஆகும். இந்த விலை குறைப்பு மாற்றங்கள் அனைத்தும் இன்று இரவு முதல் அமுலாகும்.

நிதியமைச்சு, நுகர்வோர் விவகார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் லிட்ரோவின் முயற்சிகளையடுத்து இந்த விலை சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, லிட்ரோ நிறுவனம் எரிவாயு சிலிண்டரின் விலையைக் குறைத்ததையடுத்து லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக லாஃப்ஸ் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,290 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 3,990 ரூபாவாகும். 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 516 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,596 ரூபாவாகும்.

#SRiLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...