Gas 2
இலங்கைசெய்திகள்

எரிவாயு விலைகள் குறைப்பு!

Share

12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் ரூ. 1005 ஆல் குறைக்கப்படுகிறது என லிட்ரோ லங்கா தலைவர் முடித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ரூ.3728 ஆகும். 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூ.402 ஆல் குறைக்கப்பட்டு ரூ. 1,502 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ரூ. 700 ஆகும். இந்த விலை குறைப்பு மாற்றங்கள் அனைத்தும் இன்று இரவு முதல் அமுலாகும்.

நிதியமைச்சு, நுகர்வோர் விவகார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் லிட்ரோவின் முயற்சிகளையடுத்து இந்த விலை சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, லிட்ரோ நிறுவனம் எரிவாயு சிலிண்டரின் விலையைக் குறைத்ததையடுத்து லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக லாஃப்ஸ் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,290 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 3,990 ரூபாவாகும். 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 516 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,596 ரூபாவாகும்.

#SRiLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...