tamilnib 1 scaled
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு நற்செய்தி

Share

குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு நற்செய்தி

குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவின் அக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவு வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவினை பெற தகுதியுடை 14 இலட்சத்து 6,932 குடும்பங்களுக்கான கொடுப்பனவு இவ்வாறு வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, இதன்படி, 8,775 மில்லியன் ரூபா கொடுப்பனவு வங்கிகளில் வைப்பலிடப்பட்டுள்ளது.

இந்த கொடுப்பனவுகள், நாளை (05) முதல் பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான கொடுப்பனவு எதிர்காலத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
kalani
இலங்கை

களனி கங்கையில் சிறிய வெள்ள அபாயம்.

நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து...

Maithripala Sirisena
இலங்கை

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மைத்திரி – ஹேமசிறி பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவிப்பு.

நேற்று, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்...

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...