Lotus Tower
இலங்கைசெய்திகள்

தாமரை கோபுர பார்வையாளர்கள் நேரத்தில் மாற்றம்!

Share

கொழும்பு தாமரை கோபுரத்தை’ பார்வையிட அனுமதிக்கும் நேரம் இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்கூட்டி நீடிக்கப்பட்டுள்ளதாக தாமரை கோபுர தனியார் நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

அதன்படி, நாளை (20) முதல் வார நாட்களில் நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையும், வார இறுதி நாட்களில் காலை 10.00 மணி முதல் இரவு 11.00 மணி வரையும் தாமரை கோபுரம் பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும்.

தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவான மக்கள் வருகை தருவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சமரசிங்க மேலும் தெரிவித்தார்.

பார்வையிட வருபவர்களுக்கான பயணச்சீட்டு விநியோகம் பார்வை நேரம் முடிவடைவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக நிறுத்தப்படும் எனவும் தெரிவித்தார். அதன்படி வார நாட்களில் இரவு 9.00 மணிக்கு முன்னரும் வார இறுதி நாட்களில் இரவு 10.00 மணிக்கு முன்னரும் ரிக்கெட்டுகளை கொள்வனவு செய்ய வேண்டும். .

சிறப்பு பிரிவு ஏற்படுத்த வாய்ப்பில்லாததால், 2,000 ரூபாய் ரிக்கெட் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு, 500 ரூபாய் ரிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்றார்.

10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான நுழைவுச்சீட்டு 200 ரூபா எனவும், வெளிநாட்டவர்களிடம் இருந்து 20 அமெரிக்க டொலர்கள் பயணச்சீட்டுக்காக அறவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...