Lotus Tower
இலங்கைசெய்திகள்

தாமரை கோபுர பார்வையாளர்கள் நேரத்தில் மாற்றம்!

Share

கொழும்பு தாமரை கோபுரத்தை’ பார்வையிட அனுமதிக்கும் நேரம் இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்கூட்டி நீடிக்கப்பட்டுள்ளதாக தாமரை கோபுர தனியார் நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

அதன்படி, நாளை (20) முதல் வார நாட்களில் நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையும், வார இறுதி நாட்களில் காலை 10.00 மணி முதல் இரவு 11.00 மணி வரையும் தாமரை கோபுரம் பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும்.

தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவான மக்கள் வருகை தருவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சமரசிங்க மேலும் தெரிவித்தார்.

பார்வையிட வருபவர்களுக்கான பயணச்சீட்டு விநியோகம் பார்வை நேரம் முடிவடைவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக நிறுத்தப்படும் எனவும் தெரிவித்தார். அதன்படி வார நாட்களில் இரவு 9.00 மணிக்கு முன்னரும் வார இறுதி நாட்களில் இரவு 10.00 மணிக்கு முன்னரும் ரிக்கெட்டுகளை கொள்வனவு செய்ய வேண்டும். .

சிறப்பு பிரிவு ஏற்படுத்த வாய்ப்பில்லாததால், 2,000 ரூபாய் ரிக்கெட் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு, 500 ரூபாய் ரிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்றார்.

10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான நுழைவுச்சீட்டு 200 ரூபா எனவும், வெளிநாட்டவர்களிடம் இருந்து 20 அமெரிக்க டொலர்கள் பயணச்சீட்டுக்காக அறவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...