தெற்காசியாவில் மிக உயரமான (350M) கொழும்பு தாமரைக் கோபுரம் இன்று முதல் உத்தியோகபூர்வமாக பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்ளூர் மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
உள்ளூர் மக்களுக்கு ரூ.500 மற்றும் ரூ.2,000 ரிக்கெட்டுகளும் வெளிநாட்டவர்களுக்கு 20 அமெரிக்க டொலர்களும் அறவிடப்படுகிறது.
வார நாட்களில் பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையும், வார இறுதி நாட்களில் பிற்பகல் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையும் தாமரைக் கோபுரம் பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.
#SriLankaNews
Leave a comment