14
இலங்கைசெய்திகள்

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Share

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

சட்டவிரோதமான முறையில் பதிவு செய்யப்படாத சொகுசு காரை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த(Lohan Ratwatte) மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

நுகேகொட நீதவான் நீதிமன்றில் இன்று(07.11.2024) இடம்பெற்ற விசாரணையின் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்களை நவம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கடந்த மாதம் 31ஆம் திகதியும் அவரது மனைவி கடந்த 4ஆம் திகதியும் கைது செய்யப்பட்டனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, நவம்பர் 2ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

லொஹான் ரத்வத்தவிற்கு அங்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததுடன், நவம்பர் 3 ஆம் திகதி லொஹான் ரத்வத்த திடீர் நோய் நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர், பின்னர் பொது பிரிவுக்கு மாற்றப்பட்டு சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் இருந்தார்.

இதேவேளை, வாகன சம்பவம் தொடர்பில் கடந்த 04ஆம் திகதி கங்கொடவில நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி ரஷி பிரபா ரத்வத்தவையும் இன்று (07) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன்படி சம்பவம் தொடர்பில் பல தடவைகள் மிரிஹான பொலிஸில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 12 1
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி அரசாங்கம் நகர்த்துகிறது” – ஊடக ஒடுக்குமுறை குறித்து சஜித் பிரேமதாச கடும் சாடல்!

தற்போதைய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நசுக்கி, கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை இடுவதன் மூலம் நாட்டை ஒரு...

25 694cd6294202f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்கரைப்பற்று – திருகோணமலை சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பயணிகள் காயம்!

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் 12 பேர்...

image 81ddc7db66
செய்திகள்உலகம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குண்டுவெடிப்பு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் பலி!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர்...

24 6639eb36d7d48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குளியாப்பிட்டியவில் 9 நாட்களாகக் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு: காணியில் புதைக்கப்பட்ட அதிர்ச்சிப் பின்னணி!

குளியாப்பிட்டிய, தும்மோதர பிரதேசத்தில் ஒன்பது நாட்களாகக் காணாமல் போயிருந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர், காணியொன்றில்...