49bd8b547ef08dc22b76ace42c2e4bdb XL76876878
இலங்கைசெய்திகள்

லொஹான் நாட்டுக்கு சிறந்த முன்மாதிரி! – வீரவன்ச புகழாரம்

Share

லொஹான் நாட்டுக்கு சிறந்த முன்மாதிரி! – வீரவன்ச புகழாரம்

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தன் மேல் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்று பதவி விலகியுள்ள சம்பவமானது நாட்டுக்கு முன்னுதாரணமான செயற்பாடாகும்,

இவ்வாறு கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளைஅச்சுறுத்தியதுடன் துப்பாக்கி முனையில் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை மறுக்காது, தனது தவறுக்கு மன்னிப்புக் கோரியுள்ள லொஹான் ரத்வத்த, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளமை அவரது சிறந்த பண்பை எடுத்துக்காட்டுகிறது.

எமது நாட்டில் இதுவரை இவ்வாறு குற்றமிழைத்த எவரும் தாமாக முன்வந்து இவ்வாறான செயற்பாட்டை  இதற்கு முன்னர் மேற்கொள்ளவில்லை, எனவே அவரது இந்த செயற்பாடு பாராட்டத்தக்கது – என விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
articles2Fka10y8tLGVxpVydY2Opn
செய்திகள்உலகம்

பிரித்தானிய நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டம்: பங்குச் சந்தை முதலீட்டை ஊக்குவிக்கச் சேமிப்புக் கணக்கு வரம்பு குறைய வாய்ப்பு!

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) நாளைய தினம் (நவம்பர் 26) தனது வருடாந்தர...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...