3c322545 30b25ef6 kanchana wijeskera 850x460 acf cropped 1
இலங்கைசெய்திகள்

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு!

Share

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கியூ.ஆர். கோட்டா முறைமைக்கு இணங்கத் தவறிய 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையம் லிமிடெட் ஆகியவற்றின் முகாமைத்துவம் மற்றும் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை (06) காலை நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்ச்சியாக கியூஆர் கோட்டா முறைமையை  கடைப்பிடிக்கவில்லை என்று தெரிவித்த  அமைச்சர், அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் குறைந்தபட்சம் 50 சதவீத எரிபொருள் தாங்கி கொள்ளளவை பராமரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 15 ஆம் திகதிக்குள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான அனைத்து எரிபொருள் பௌசர்களுக்கும் ஜிபிஎஸ் கண்காணிப்பு அமைப்புகள் பொருத்தப்படும் என்றும் அதற்கு பின்னர், அனைத்து தனியார் பௌசர்களுக்கும் ஜிபிஎஸ் கண்காணிப்பு அமைப்பு பொருத்தப்படும் என்றார்.

இதேவேளை, 26 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.

QR ஒதுக்கீடுகளை தொடர்ந்து கடைப்பிடிக்கத் தவறிய காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4JVJ5DK AFP 20251227 89488ZV v2 HighRes FilesYemenConflictProtestUaeSaudi jpg
செய்திகள்உலகம்

ஏமனிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்: சவுதி – அபுதாபி விரிசல் பின்னணியா?

ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டிருந்த தனது படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம்...

image baba9371d9
செய்திகள்அரசியல்இலங்கை

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க மேலதிக அவகாசம்: ஜனவரி 31 வரை நீடிப்பு!

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை (Firearm Licenses) புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்...

Foreign Ministry
செய்திகள்இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 3 ஆண்டு காலத் தவிப்பு: இலங்கைப் பெண்ணை மீட்க வெளிவிவகார அமைச்சு நேரடித் தலையீடு!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) தனது குழந்தையுடன் நாடு திரும்ப முடியாமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகச்...

rain
செய்திகள்இலங்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் இன்று மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (31) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...