வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு இலங்கை மதுவரி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய, மேற்படி தினங்களில் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும், அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறிச் செயற்படும் உரிமம் பெற்ற மதுபானசாலைகளுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று மதுவரி ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
#SriLankaNews