election commission 10.12.2021
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி தேர்தல்! – விரைவில் வர்த்தமானி

Share

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி பத்திரம் எதிர்வரும் 30 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படவுள்ளதாக தேர்தல் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உள்ளூராட்சி சபைகளின் கால எல்லை கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடையும் நிலையில் அதன் காலஎல்லையை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்பதாக உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்தி அதற்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன்படி நீடிக்கப்பட்டுள்ள கால எல்லை நிறைவடைவதற்கு முன்பதாக மூன்று மாதங்களுக்குமுன் தேர்தலை நடத்துவது தொடர்பில் அறிவிப்பை வெளியிடவேண்டியுள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஒக்டோபர் 30 ஆம் திகதியில் இம்முறை வாக்காளர் இடாப்பில் கையொப்பமிடுவதற்கு தேர்தல்கள் செயலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதற்கிணங்க கையெழுத்திட்ட பின்னர் தேர்தல் நடத்துவது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவேண்டும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

#srilanka news

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...