1670598811 jaffna 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!!

Share

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்துள்ள நிலைமையின் கீழ் அங்கு வாழும் பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் பால் பொருட்கள் உட்பட கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகளின் மூலம் தமது வாழ்வாதாரத்தை பேணுவதற்கு மாடு மற்றும் ஆடுகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

எவ்வாறாயினும், அண்மையில் ஏற்பட்ட குளிரான வானிலை காரணமாக 1,800 மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்துள்ள நிலையில், இவற்றை வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தும் மக்கள் தற்போது மிகவும் அவல நிலைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திடம் “அத தெரண” வினவியது.

இதன்போது, வாழ்வாதாரத்தை இழந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.ஏ.சி.எச். கொத்தலாவல குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியை ஆரம்பித்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்களை ஆராய்ந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்த நிலையில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகள் மோசமான வானிலையினால் உயிரிழந்துள்ளதாகவும், தொற்று நோயினால் அல்ல எனவும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி, வட மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இறைச்சிக் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Canned Fish 1200px 22 11 06 1000x600 1
செய்திகள்இலங்கை

டின் மீன் வகைகளுக்கான புதிய அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை...

AA1QtdSx
செய்திகள்உலகம்

தென் கொரியா சியோனானில் பாரிய தீ விபத்து: இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு 129 தீயணைப்பு வீரர்கள் முயற்சி!

தென் கொரியாவின் தென் சங் சியோங் மாகாணம், சியோனான் நகரம், தொங்னாம்-கு, புசியோங்-ம்யோன் பகுதியில் அமைந்துள்ள...

Dr. Nalinda Jayathissa 2024.08.23 1 1
செய்திகள்இலங்கை

விலை மனுதாரர்களைத் தெரிவு செய்வதில் நடந்த மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி!

மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியிடப்படும் என...

fc8354edbbb9260d3534c77dcb0e01de 1200
செய்திகள்உலகம்

வெளிநாட்டு மாணவர் கட்டணத்தில் 6% புதிய வரி:  பிரித்தானியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அதிருப்தி!

வெளிநாட்டு மாணவர்களின் கல்விக் கட்டணத்தின் மீது பிரித்தானிய அரசாங்கத்தால் விதிக்கப்படவுள்ள புதிய வரித் திட்டம் குறித்து,...