1 4
இலங்கைசெய்திகள்

50 வருட ஆட்சி! தப்பி ஓடிய ஆசாத் : கிளர்ச்சியாளர்களின் வெற்றி!

Share

50 வருட ஆட்சி! தப்பி ஓடிய ஆசாத் : கிளர்ச்சியாளர்களின் வெற்றி!

சிரியாவில் (Syria), ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் (Bashar al-Assad) ஆட்சி கவிழ்ந்துவிட்டதாகவும், சிரியா தலைநகரில் போராளி குழுக்கள் நுழைந்ததால் ஆசாத் தப்பி ஓடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.

சில ஆண்டுகளாக பெரிய அளவில் வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டனர்.

இஸ்ரேல் (Israel) மற்றும் ஹிஸ்புல்லா (Hezbollah) இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில் இந்த கிளர்ச்சி வெடித்துள்ளது.

முன்னதாக சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இந்த சூழலில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி கிளர்ச்சியாளர்கள் முன்னேறி ஆட்சியை பிடித்துள்ளனர்.

இந்நிலையில் 50 வருட ஆட்சி கவிழ்ந்துவிட்டதாக வீரர்களுக்கு அந்நாட்டு ராணுவம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிரியாவில் இருந்து ஜனாதிபதி பஷர் அல் ஆசாத் விமானத்தில் ரகசியமாக தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் “தலைநகரை நகரை நாங்கள் சுற்றி வளைத்து விட்டோம்” என்று கிளர்ச்சியாளர்கள் குழுவின் தளபதி ஹசன் அப்தில் கனி தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் சிரியா செல்வது என்பது ஏற்று கொள்ள முடியாதது என கூறி வருகிறது. இதனால், மத்திய கிழக்கில் பதற்ற நிலை காணப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 5 3
செய்திகள்இலங்கை

100 பில்லியன் மேலதிக வருமானம் ஈட்டிய வாகன இறக்குமதி வரிகள்: 2026 நிதித் திட்டங்களை இலகுவாகத் தயாரிக்க முடிந்தது – பாராளுமன்றத் திணைக்களம்!

2025ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகள் மூலம் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை விட ரூபா 100 பில்லியனுக்கும்...

MediaFile 1 5
செய்திகள்இலங்கை

இலங்கைக்கான புதிய தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள் ஐவர் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளிப்பு!

இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று (நவ 13)...

MediaFile 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் அடம்பனில் 8 வயதுச் சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றவாளிக்கு 8 வருட கடூழியச் சிறைத்தண்டனை! – நஷ்ட ஈடாக ரூ. 2 லட்சம் வழங்க உத்தரவு!

மன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயதுச் சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில்,...

images 4 4
செய்திகள்அரசியல்இலங்கை

இழப்பீடு மீள அறவிடக் கோரும் மனு: முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தை மீளப் பெற உயர் நீதிமன்றம் உத்தரவு!

சட்டத்திற்குப் புறம்பாக இழப்பீடு பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் (எம்.பி.க்கள்) இருந்து அந்த...