மதுபானசாலைகள் மூடல் – 16,000 கோடி நஷ்டம்
கொரோனா சூழ்நிலை காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் மதுபானசாலைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
மதுபானசாலைகள் மூடப்பட்டமை காரணமாக நாளொன்றுக்கு 700 கோடி ரூபா நட்டம் ஏற்படுகிறது என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த மாதம் 20ஆம் திகதி முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபா நஷ்டம் ஏற்படுகிறது என்றும் மதுவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Leave a comment